நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த நேபாளத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு... மாணவர்கள் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலை குலைந்து போன நேபாளத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. நிலநடுக்க பீதி காரணமாக இப்புதிய பள்ளிக்கூடங்கள் மூங்கிலால் அமைக்கப் பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு நில அதிர்வுகள் உணரப் பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

Schools reopen in earthquake-devastated Nepal

இந்நிலையில், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக மூங்கில்களால் வேயப்பட்ட கூடாரத்தில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.

நிலநடுக்க பீதி காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியே அனுப்ப அஞ்சுகின்றனர். அத்தகைய பெற்றோர்களை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து, ‘மீண்டும் பள்ளிக்கும் வந்தால் குழந்தைகள் புத்துணர்ச்சி அடைவார்கள்' என எடுத்துக் கூறி, அவர்களைப் பள்ளி அழைத்துச் செல்கின்றனர்.

ஆசிரியர்களின் வார்த்தையை மெய்ப்பிப்பது போல, நீண்ட நாட்களாக பீதியுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த குழந்தைகளுக்கு இப்பள்ளிகள் புத்துணர்வு முகாமாகத் தான் இருக்கிறது.

மீண்டும் பழைய நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சி குழந்தைகள் முகத்தில் தெரிவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+