புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி; 8 பேர் காயம்
புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்தனர்.
புளோரிடா: புளோரிடா விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் விமான நிலையத்திற்குள் புகுந்த நபர் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அந்நாட்டு நேரப்படி மதியம் 1 மணியளவில் விமான நிலையத்திற்குள் புகுந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பயணிகள் நாலாபுறமும் ஓட துவங்கினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டை அடுத்து விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
I'm at the Ft. Lauderdale Airport. Shots have been fired. Everyone is running.
— Ari Fleischer (@AriFleischer) January 6, 2017