பெண்ணிடம் ஓவர் "உச்ச" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்!
உடலுறவின்போது இளைஞர் மரணமடைந்துவிட்டார்
மலாவி, தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவில் உடலுறவின்போதே ரத்த நாளங்கள் வெடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த நபருக்கு 35 வயசு இருக்கும். மலாவி என்ற ஊரைச் சேர்ந்தவர். பெயர் சார்லஸ் மஜாவா. சம்பவ நாளன்று இவர் ஒரு விபச்சார பெண்ணை புக் செய்து ரூம் போட்டு உற்சாகத்தில் குதித்தார். உள்ளே போன கொஞ்ச நேரத்திலேயே அந்தப் பெண் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

சக விபச்சார பெண்களிடம், அந்த நபர் செத்துப் போய் விட்டார், திடீரென மூர்ச்சையாகி விட்டார் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாருக்கு தகவல் போனது. போலீஸார் டாக்டருடன் விரைந்து வந்தனர். சோதனையில் அந்த நபர் இறந்து போய் விட்டது தெரிய வந்தது.
இந்த மரணம் நடந்ததுதான் ரொம்பவும் வினோதமானது... அதாவது உடலுறவின்போது அந்த நபருக்கு அதீதமாக உணர்வுகள் கிளர்ந்தெழுந்துள்ளன. அவருக்குள் ஏற்பட்ட உச்ச நிலையால் ரத்த அழுத்தம் அதிகமாக போய் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து விட்டன. இதனால் அந்த நபர் மூர்ச்சையாகி செத்துப் போய் விட்டார்.
உடலுறவில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அந்த ஆண் இப்படி இறந்துள்ளார். இதேபோலத்தான் நமது நாட்டிலும், நாக்பூரில் ஒரு நபர் உறவின்போது கழுத்து, கை, கால்களை கயிறால் கட்டி பெண்ணுடன் உறவில் ஈடுபட்டார். அப்போது உற்சாகம் அதிகமாகி, கயிறு கழுத்தை இறுக்கி உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications