ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு!
Recommended Video

ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மரியம் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையான அதியாலாவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் இருந்து அபுதாபி வழியாக லாகூர் விமான நிலையம் வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஆகியோர் நேற்று இரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதன் பிறகு சிறப்பு விமானத்தில் மூலமாக அவர்கள் ராவல்பிண்டி அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஐபிகளான இவர்களுக்கு, சிறையில் பி பிரிவு வசதி கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற வசதிகளை சொந்த செலவில் வாங்கி வைத்துக்கொள்ள, பி பிரிவு கைதிகளுக்கு அனுமதியுள்ளது.
முன்னதாக, இஸ்லாமாபாத் நீதிபதி மேற்பார்வையில் டாக்டர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, போலீஸ் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருமே நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். மரியத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நவாஸ் ஷெரிப்பின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை லண்டனிலேயே விட்டுவிட்டு நவாஸ் ஷெரீபும் அவரது மகளும் பாகிஸ்தான் திரும்பி சிறை சென்றுள்ளனர். வரும் 25 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த சூழ்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் சிறைவாசம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications