1 லட்சம் பேர்.. கூட்டநெரிசலில் மூச்சுத்திணறல்.. மயங்கி விழுந்து 120 பேர் பலி.. தென்கொரியாவில் ஷாக்
சீயோல்: தென்கொரியாவில் இறந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் நடந்த ஹாலோவீன் விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தென்கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசயைாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதர்கள், தியாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் என இறந்தவர்களை நினைவுகூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒரு லட்சம் பேரால் கூட்ட நெரிசல்
இந்நிலையில் தென்கொரியா இடோவான் என்ற இடத்தில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் ஹாலோவீன் திருவிழா தற்போது நடந்து வந்தது. இன்று நடந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கூடியிருந்தனர். விழா நடந்த இடம் மிகவும் சிறியது என்ற நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இடித்து கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியது.

மூச்சுத்திணறல்
இதனால் விழாவில் பங்கேற்ற பலரும் மூச்சுத்திணறி அப்படியே பொத்தென விழுந்தனர். இதை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொதுமக்கள் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

120 பேர் பலி
மொத்தம் 140 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இருப்பினும் கூட்டம் அதிகம் என்பதால் மயங்கியவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி நிலவரப்படி ஹலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியான வீடியோக்கள்
இதற்கிடையே தான் ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட இந்த சோகம் சம்பவம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மீட்டு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டதும், கூட்ட நெரிசலில் மயங்கியவர்களை உயிர் காக்க பொதுமக்களே முதலுதவி செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நெஞ்சை உருக்குகின்றன. இந்த சம்பவம் நேற்று தென்கொரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications