இங்கிலாந்தில் இருந்து கடைசி சீக்கிய மகாராஜா உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல கோரிக்கை!
லண்டன்: இங்கிலாந்தில் அடக்கம் செய்யப்பட்ட கடைசி சீக்கிய மகாராஜா துலீப் சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்நாடு வாழ் சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1984-ல் சீக்கியர்கள்- ஆங்கிலேயர்கள் இடையேயான யுத்தத்தைத் தொடர்ந்து பஞ்சாப் , பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது இளவரசர் துலீப்சிங் உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு ஆங்கிலேயர்களால் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இங்கிலாந்தில் ஆங்கிலேயே வாழ்க்கை முறைப்படி, கிறிஸ்தவராக வளர்ந்த துலீப் சிங் விக்டோரியா மகாராணி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். 13 ஆண்டுகாலம் கழித்து இங்கிலாந்தில் தாயாருடன் துலீப் சிங் இணைந்துகொண்டார்.
இதன் பின்னர் தங்களது ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்ற சீக்கிய மதத்துக்கு மாறுவதாக அறிவித்தார் துலீப்சிங் அப்படி இந்தியாவுக்கு செல்லும் வழியில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் 55வயதில் துலீப் சிங் உயிரிழந்தார். அவரது உடல் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது. தற்போது துலீப்சிங் நூற்றாண்டு அறக்கட்டளையினர், மகாராஜாவின் இறுதி விருப்பப்படி அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு சென்று சீக்கிய முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications