ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சிங்கப்பூர்!
சிங்கப்பூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சிங்கப்பூராக இருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.
இதுகுறித்து 'ஸ்கூல் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடிஸ் அனலிஸ்ட்' அமைப்பின் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் ராஜரத்தினம் மற்றும் ஜஸ்மிந்தர் சிங் ஆகியோர் சிங்கப்பூர் நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியதாவது: மலேசியாவின் நாடாளுமன்றத்தை தாக்கவும், தலைநகரில் குண்டு வைக்கவும் வந்த நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரை சேர்ந்த 19 வயது மாணவன், சிரியாவுக்கு சென்று தீவிரவாதியாக திட்டமிட்டிருந்ததாகவும், சிங்கப்பூருக்கு வந்து தாக்குதல் நடத்த அவன் திட்டமிட்டிருந்ததாகவும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து 700க்கு மேற்பட்டோரும், மலேசியாவில் இருந்து 200க்கு மேற்பட்டோரும் சிரியா சென்று தீவிரவாதிகளுடன் சேர்ந்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications