For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல் சல்வடார் நாட்டின் சிறுவர் சிறை கலவரத்தில் 6 பேர் பலி

Google Oneindia Tamil News

சான் சல்வடார்: எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறுவர் சிறையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் பலியாகினர்.

எல் சல்வடார் நாட்டின் தலைநகரான சான் சல்வடார் நகரின் புறநகர் பகுதியில் உள்ளது சிறுவர் சீர்திருத்த சிறை. 700-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறையில், கைதிகள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் உள்ள ஒரு கோஷ்டியின் பெயர் மாரா சல்வரட்சா அல்லது எம்.எஸ்.-13.

எம்.எஸ்.13 கோஷ்டிக்கும், மற்றொரு கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. இதில் 2 மைனர் குற்றவாளிகள் உள்பட 6 கைதிகள் கொல்லப்பட்டனர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து , அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Six prisoners killed in juvenile jail clash in el salvador among those two are minors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X