For Daily Alerts
Just In
எல் சல்வடார் நாட்டின் சிறுவர் சிறை கலவரத்தில் 6 பேர் பலி
சான் சல்வடார்: எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறுவர் சிறையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் பலியாகினர்.
எல் சல்வடார் நாட்டின் தலைநகரான சான் சல்வடார் நகரின் புறநகர் பகுதியில் உள்ளது சிறுவர் சீர்திருத்த சிறை. 700-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறையில், கைதிகள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் உள்ள ஒரு கோஷ்டியின் பெயர் மாரா சல்வரட்சா அல்லது எம்.எஸ்.-13.
எம்.எஸ்.13 கோஷ்டிக்கும், மற்றொரு கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. இதில் 2 மைனர் குற்றவாளிகள் உள்பட 6 கைதிகள் கொல்லப்பட்டனர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து , அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Six prisoners killed in juvenile jail clash in el salvador among those two are minors.
Story first published: Thursday, September 26, 2013, 15:48 [IST]