சிலியில் 54 ஆண்டுகளாக கும்பகர்ணனைப் போல உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை திடீரென வெடித்தது!
சாண்டியாகோ: சிலி நாட்டில் 54 ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை வெடித்து சிதறியதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தலைநகரான சாண்டியோகோவில் இருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெற்கு துறைமுக நகரமான பர்டோமோண்ட். இங்கு கால்புகோ எரிமலை உள்ளது. கடந்த 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து வானில் சாம்பல் மற்றும் புகையை அது கக்கி வருகிறது. இதனால், எரிமலையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.

அவசர நிலை:
இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2வது இடத்தில் சிலி...
எரிமலைகள் நிறைந்த நாடுகளில் இந்தோனேஷியா முதலிடத்திலும், சிலி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இங்கு, ஏறக்குறைய, 500க்கும் மேற்பட்ட, இயக்கத்தில் உள்ள எரிமலைகள் உள்ளன. இதற்கு முன், சாண்டியாகோவில் உள்ள வில்லாரிகா எரிமலை வெடித்தது.

54 ஆண்டுகளுக்கு முன்...
கடந்த 1961ம் ஆண்டு, கால்புகோ எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது எழுந்த சாம்பல் புகை, வானில் 100 கி.மீ., பரப்பளவில் பரவியது குறிப்பிடத்தக்கது.

7 மணி நேரம் கழித்து...
முதல் வெடிப்பு உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இது நீடித்தது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பலும், புகையும் வியாபித்துக் காணப்பட்டது. அதன் பின்னர் 7 மணி நேரம் கழித்து மீண்டும் எரிமலை வெடித்தது. இப்போது லாவாவை அது கக்கியது.

நேரில் பார்வை...
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அதிபர் மிச்சல் பேச்லெட் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்களும் வந்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications