ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டதாக கருதப்பட்ட இஸ்ரேல் வீரர் போரில் பலி!
ஜெருசலேம்: ஹமாஸ் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர் போரின்போது ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை இன்று காலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. வெள்ளிக்கிழமை காலை நடந்த உக்கிரமான போரின்போது ஹமாஸ் தாக்குதலில் இந்த வீரர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட வீரரின் பெயர் ஹதர் கோல்டின். 23 வயதாகும் இவர் மத்திய இஸ்ரேலின் கபார் சபா பகுதியைச் சேர்ந்தவர்.
இஸ்ரேல் -ஹமாஸ் இடைய ஏற்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அதிரடியாக இரு தரப்பாலும் மீறப்பட்டு தொடர்ந்து உக்கிரமான தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 1650 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல இஸ்ரேல் தரப்பில் 63 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு என்னவோ பாலஸ்தீனத்தில்தான் அதிகம். அதிலும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள்தான் மிக அதிகம். ஆனால் 63 ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். என்ன செய்கிறார் பிரதமர் பெஞ்சமின் நதாயன்ஹூ என்று இஸ்ரேலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும், தாக்குதல் உக்கிரமாகும் என்று பெஞ்சமின் நதாயன்ஹு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில் இஸ்ரேல் தனது இலக்குகளை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. இஸ்ரேலில் மீண்டும் அமைதி திரும்பும். இதுதொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நான் மறக்கவில்லை. நமது உத்திகளில் மாற்றம் வரும். இலக்கு நிறைவேறும் வரை போர் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications