அழிவு நெருங்கிடுச்சு.. தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்! அடுத்து இந்தியா தான்!
கேப் டவுன்: உலகம் வேகமாக வெப்பமாகி வருவதால், வானிலையில் தீவிர மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், அந்நாடு கடல் மட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் நிச்சயமற்ற வானிலையை ஏற்படுத்தும். ஆனால் இது எந்த நாட்டை எப்போது பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவை காலநிலை மாற்றம் பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இந்த நாட்டை சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, இந்த நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மி.மீ என்கிற அளவில் உயரமடைந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடுமையான வறட்சி, போதுமான மழை இல்லாததுதான் இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு மேல் இயங்கி வரும் GNSS செயற்கைக்கோள் மூலமாக இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை செயற்கைக்கொள்கள் வளிமண்டலம் குறித்த ஆய்வு செய்யும். அதேபோல உயரம் தொடர்பான தகவல்களையும் துல்லியமாக வழங்கும். கடந்த 2012 முதல் 2020 வரை இந்த செயற்கைக்கோளின் டேட்டாவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, தென்னாப்பிரிக்கா தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த 8 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா மொத்தம் 6 மி.மீ என உயர்ந்திருக்கிறது என்று, பான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் நிபுணர் கரேகர் கூறியுள்ளார். இது குறித்த அவர் மேலும் கூறுகையில், "புவியின் மேலோட்டில் ஏற்படும் மாற்றங்கள் இதுபோன்று நிலப்பரப்பை உயர்த்தலாம். மலைகள் கூட இப்படி உருவானதுதானே? ஆனால், எங்களுக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது. வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் குறைந்திருக்கலாம் என யோசித்தோம்.
நாங்கள் யோசித்தது பின்னர்தான் சரி என்பதை உணர்ந்துக்கொண்டோம். இதற்காக நாங்கள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பனிப்பொழிவு நிலைமையை கண்காணித்தோம். ஏரி, குளம், குட்டை என மற்ற நீர்நிலைகளையும் கண்காணித்தோம். இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து, இறுதியில் வெப்பம் காரணமாக நீர் ஆவியாகியிருப்பதே நிலத்தடி உயர்வுக்கு காரணம் என்பதை தெரிந்துக்கொண்டோம். இதற்கு முன்னர் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
2015-2019ம் ஆண்டும் இதேபோன்று வறட்சி அதிகமாக இருந்தது. அப்போதும் கூட நிலத்தடி மட்டம் அதிகரித்து வந்திருக்கிறது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாத 'பூஜ்ஜிய நாளை' தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது. நாங்கள் மேற்கொள்ள ஆய்வு சரியானதா? என்பதை தெரிந்துக்கொள்ள நாசா மற்றும் ஜெர்மனி நாட்டின் செயற்கைக்கோள்களின் உதவியையும் நாடியிருந்தோம். இறுதியாக, காலநிலை மாற்றம்தான் வறட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வறட்சிதான் தென்னாப்பிரிக்காவின் எழும்பலுக்கு காரணம் என்பது உறுதியாகியிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?:
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து வெளியாகும் கரியமில வாயுக்கள் வளிமண்டலத்தின் அடர்த்தியை இழக்க செய்கிறது. மறுபுறம் வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் சூரியனின் வெப்பம் பூமிக்குள் வந்து, வெளியேற முடியாமல் இங்கே தங்கிவிடுகிறது. இது தொடர்ந்து நடக்க, பூமி இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையை எட்டுகிறது.
எனவே துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. இது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகமாகி கடல்நீர் மட்டம் குறைந்துவிடுகிறது. இப்படி ஒரு பகுதியில் வேறு மாதிரியும், மற்றொரு பகுதியில் வேறு மாதிரியும் கடல்நீர் மட்டம் உயர்வது, திடீர் வெள்ளம், வறட்சி உள்ளிட்டவை ஏற்படுவது என எல்லாவற்றிற்கும் இந்த காலநிலை மாற்றம்தான் காரணம்.
இன்று தென்னாப்பிரிக்காவில் நடந்தது நாளை, இந்தியாவிலும் நடக்கலாம். இந்தியாவில், கடற்கரை நகரங்கள்தான் பொருளாதாரத்திற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இது அடுத்த 50 ஆண்டுகளில் ஒரேயடியாக மூழ்கலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications