இந்திய வம்சாவளி வைரலாஜி விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவால் தென்னாப்பிரிக்காவில் மரணம்
டர்பன்: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச வைரலாஜி விஞ்ஞானி கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அறிவியல் ஆய்வு உலகில் பெருமதிப்புக்குரியவராக போற்றப்படுகிறவர் கீதா ராம்ஜி. ஹெச்.ஐ.வி. தடுப்பு தொடர்பான ஆய்வுக்கான சர்வதேச அளவில் வாழ்நாள் விருதை பெற்றவர்.

வைரலாஜி தொடர்பாக இதுவரை 100க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். ஏராளமானோருக்கு பேராசிரியராக, வழிகாட்டியாக இருந்து ஆய்வுகளுக்கு உதவி வந்தவர் கீதா ராம்ஜி.
அண்மையில் கீதா ராம்ஜி லண்டன் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இருக்கவில்லை.
ஆனால் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கீதா ராம்ஜி உயிரிழந்தார். அவரது மறைவுக் ஹெச்.ஐ.வி. தடுப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு பெரும் பின்னடைவு என்பது சர்வதேச விஞ்ஞானிகளின் கவலை.












Click it and Unblock the Notifications