கச்சத்தீவு: இலங்கை எம்பிக்கு வேண்டுகோள் விடுத்தாரா சசிகலா? பரபரப்பு கடிதம்
இலங்கையைச் சேர்ந்த எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கொழும்பு: தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருப்பதாக இலங்கை எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான், சசிகலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சசிகலா வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் ஏற்கனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், தற்போது 100 தமிழக மீனவர்கள் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#Katchatheevu திருவிழா அனுமதி தொடர்பாக இலங்கை எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான் @PonnaarrBJP & திருமதி. சசிகலா-விற்கு எழுதிய கடிதங்கள் #Sasikala pic.twitter.com/4TcCunrqJF
— thanthitv (@thanthitv) December 15, 2016
இலங்கை அரசு எடுத்துள்ள முடிவின் படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் தந்தி டிவியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications