இலங்கை போர்க்குற்றம்: சர்வதேச குழு விசாரிக்க சீனா உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு
நியூயார்க்: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை குழு விசாரணை நடத்த சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொடுமைப்படுத்தி, கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இதையடுத்து இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அந்நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் 3 ஆண்டுகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவி பிள்ளை இலங்கை சென்று அங்கு நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையும் அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
எங்கள் அரசே போர்க்குற்றம் குறித்து விசாரிக்கும். அதனால் சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார். இந்நிலையில் தான் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசாரி (77), நியூசிலாந்து நாட்டின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் (70), பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் (62) ஆகியோர் கொண்ட 3 நபர் விசாரணை குழுவை ஐ.நா. கடந்த ஜூன் மாதம் 25ம் அமைத்தது.
இந்த சர்வதேச குழு இலங்கை சென்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, அல்ஜீரியா, அங்கோலா, வங்கதேசம், பெலாரஸ், பொலிவியா, கியூபா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகரகுவா, தெற்கு சூடான், உகாண்டா, சூடான், வெனிசுலா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications