இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா.வில் இன்று தாக்கல்!
ஜெனீவா: சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது அமர்வு கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இதற்கு முன்பு மூன்று முறை அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டுவந்தது. அந்த தீர்மானங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றன.

2012, 2013ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்த இந்தியா கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது அமர்வுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற புகார் குறித்து ஐ.நாவின் 3 நபர் குழு நடத்திய விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கூறி வந்த அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இது இன அழிப்பு கிடையாது, மனித உரிமை மீறல்தான் என்பதால் உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று தெரிவித்துள்ளது. இது குறித்த தீர்மானத்தையும், இந்தக் கூட்டத்தில் அந்த நாடு கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தங்கள் நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்ளவே இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லி வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications