ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் தீர்ந்தது.. வழக்கை 'க்ளோஸ்' செய்தது துபாய் அரசு!
Recommended Video
துபாய்: துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் அவருக்கு துபாயில் உள்ள மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கை நேற்று வெளியானது.
அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் பாத்ரூம் குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
குற்ற நோக்கத்தில் அவர் நீரில் மூழ்கடிக்கப்பட்டதற்கான தடயம் இல்லை என்றும் தடயவியல் ஆய்வறிக்கை தெரிவித்தது.
தாமதம்
இந்த நிலையில், இயற்கையான முறையில் மரணம் நிகழவில்லை என்பது தெரியவந்ததால், ஸ்ரீதேவி வழக்கு துபாய், Public Prosecution பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால் நேற்று ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர முடியவில்லை. தீவிர விசாரணை இன்றும் தொடர்ந்தது. இந்த நிலையில், ஸ்ரீதேவி உடல் எம்பாமிங் செய்யப்பட இன்று மதியம்தான் அனுமதி கிடைத்தது. எனவே ஸ்ரீதேவி உடல் இரவு மும்பை வர உள்ளதாம்.
|
விசாரணை நடந்தது
இதுகுறித்து துபாய் மீடியா ஆபீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டுகளில் கூறியுள்ளதாவது: இந்திய நடிகை (ஸ்ரீதேவி) உடலை அவரின் குடும்பத்தாரிடம் வழங்க துபாய் Public Prosecution ஒப்புதல் வழங்கிவிட்டது. முன்னதாக, ஸ்ரீதேவி மரணமடைந்த சூழல் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
|
வழக்கு முடிந்தது
துபாய் Public Prosecution வழக்கமான அனைத்து விசாரணை நடைமுறைகளையும் முடித்துவிட்டது. தடயவியல் அறிக்கைப்படி, இந்திய நடிகையின் (ஸ்ரீதேவி) மரணம் சுயநினைவு இழந்து விபத்து ரீதியில் தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இவ்வாறு டுவிட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
மர்மம் தீர்ந்தது
இதன் மூலம், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார் என்று வெளியான தகவல்களை துபாய் விசாரணை அமைப்பு புறக்கணித்துவிட்டது என்பது தெளிவாகிறது. எனவே ஸ்ரீதேவி மரணத்தில் நிலவிய மர்மம் முடிவுக்கு வந்துள்ளது.