பேரிடி! மேலும் ஒரு தமிழக மீனவருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்- கொந்தளிக்கும் ராமேஸ்வரம்!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு தமிழ்நாட்டு மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருப்பது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ அத்துமீறி உள்ளே நுழைந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களைத் தாக்குவது, கைது செய்வது, சுட்டுக் கொல்வதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தடுத்து நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேருக்கு அண்மையில் இலங்கையின் ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்தது. தற்போது இந்த 3 மீனவர்களும் சிங்களர் அதிகமாக இருக்கும் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் ஆட்சியை சந்திக்க நடைபயண போராட்டத்தையும் நடத்தி இருந்தனர். மேலும் இம்மாத இறுதியில் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் ஜான்சன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் (ஊர்க்காவல்துறை). அதேநேரத்தில் 18 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அடுத்தடுத்து இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து வருவது போராட்டம் நடத்தி வரும் ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு தலைவர்களின் தொடர் அழுத்தமும் குரலுமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையினர் கடந்த 2023-ல் 243 தமிழக மீனவர்களை கைது செய்து, 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications