இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், கம்யூனிஸ்ட் அனுர குமார திசநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அனுர குமார திசநாயக்க 42.31% வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாச 32.76% வாக்குகள் பெற்றார். இதையடுத்து, 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கையின்படி, அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் மிக அமைதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. மொத்தம் 60%-க்கும்ன் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவாக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள் அதிகம் நிகழும். இம்முறை அப்படியான வன்முறை எதுவும் இடம்பெறவில்லை.

sri lanka presidential election 2024 sri lanka election 2024

முதல் சுற்று எண்ணிக்கை: ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கியது. அதிகாலை 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார். 2-வது இடத்தில் எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாச, 3-வது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஈழத் தமிழர் பகுதிகளில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது. தமிழர் பகுதிகளில் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு சொற்பமான வாக்குகளே கிடைத்தன.

50% வாக்குகள் கிடைக்கவில்லை: இலங்கை அதிபர் தேர்தலில் 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்று முடிவில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. அனுர குமார திசநாயக்க மொத்தம் 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்று 42.31 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலை வகித்தார். சஜித் பிரேமதாச 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 ஓட்டுகள் பெற்று 32.76% வாக்குகளுடன் 2ம் இடம் பிடித்தார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 17 சதவீத ஓட்டுகள் அதாவது 22 லட்சத்து 99 ஆயிரத்து 767 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார்.

2வது விருப்ப தேர்வு வாக்குகள்: இதனால் 2வது விருப்பத் தேர்வு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள அனுர குமார திசநாயக்க, 2வது இடம் பிடித்த சஜித் பிரதாச இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கையின்படி, அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திசநாயக.

யார் இந்த அனுர குமார திசநாயக்க: தற்போதைய நிலையில் முன்னிலை வகிக்கும் அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத கட்சியின் தலைவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்தியதில் ஜேவிபிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதேநேரத்தில் தங்களை இடதுசாரிகளாக வெளிப்படுத்திக் கொள்கிற கட்சி ஜேவிபி. இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயுதப்போராட்டம் நடத்திய அதே கால கட்டத்தில் ஜேவிபியும் இலங்கையில் ஆயுதமேந்தி அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியது. பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது. அந்த ஜேவிபியின் அனுர குமார திசநாயக்கதான் தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். இலங்கையில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர் அனுர குமார திசநாயக்க.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியும் அதன் பிந்தைய தாக்கமும் புதிய தலைமைத்துவத்தை தேட வைத்திருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அனுர குமார திசநாயக்க டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். இதனால் இந்தியா அவரையே தேர்தலில் ஆதரிப்பதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் அனுர குமார திசநாயக்க, வெற்றி பெறும் நிலையில் சீனா சார்பு நிலையை எடுக்கக் கூடும் என்கிற தகவல்களும் வெளியாகின. இதனையடுத்து இந்திய தரப்பு சஜித் பிரேமதாசவை ஆதரித்ததாகவும் இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அனுர குமார திசநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் வென்றால் இந்தியாவுக்கு நெருக்கடியைத் தருவாரோ? என்கிற சந்தேகமும் அவரது சீனா ஆதரவு போக்கினால் இயல்பாகவே எழுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சஜித் கட்சி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் அநுரவுக்கு சாதகமாக அவர் பக்கம் சாய்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் இல்லாமலேயே விருப்ப வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இது சட்டவிரோதமானது என சஜித் கட்சியைச் சேர்ந்த சுஜீவ சேனசிங்க குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+