ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி; 30 பேர் படுகாயம்
பாக்தாத்: ஈரோக் தலைநகர் பாக்தாத் அருகில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காலிஸ் நகரம். இந்த நகருக்கு வெளியே உள்ள சோதனைச்சாவடியில் நேற்று காலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அப்போது ஒரு காரில் வேகமாக வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் திடீரென காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.

இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்ததுடன், அவற்றில் இருந்தவர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் அங்கு நின்றிருந்த மினி பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாபமாக பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications