லிபியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி, 8 பேர் காயம்
பெங்காசி: லிபியாவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பெங்காசி நகருக்கு வெளியே உள்ள சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்து இன்று மோதினான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால் சம்பவ இடத்தில் மேலும் சில உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள நகரான டோக்ராவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மை காலமாக பெங்காசி நகரில் ஏராளமான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications