நைஜீரிய மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்... 40க்கும் மேற்பட்ட மக்கள் பலி
அபுஜா: நைஜீரியாவில் இரு வெவ்வெறு இடங்களில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதல் இரண்டு மசூதிகளிலும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கடவுள் பெரியவர்" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் தற்கொலைப் படை தீவிரவாதிகளும் உயிரிழந்து விட்டனர். முன்னதாக, ராணுவ தளம் ஒன்றினை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தகர்க்க முற்பட்டனர். அதில் 9 பேர் காயமடைந்ததாகவும், 7 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காலை வேளை தொழுகை நடைபெற்ற டமாடரு மற்றும் யோப் ஆகிய இரண்டு நகரங்களில், இரண்டு வெவ்வேறு மசூதிகளில் பெண் மனித வெடிகுண்டுகளால் இந்த பயங்கர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
"ஒரு பெண் மனித வெடிகுண்டு மசூதிக்குள் நேரடியாக நுழைந்து இந்த சதிதிட்டத்தை நிறைவேற்றியுள்ளார். மற்றொருவர் வெளியில் சுற்றித் திரிந்து வெடிபொருளை வெடிக்கச் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மற்றொரு தாக்குதல் புலானியில் நடைபெற்று கிட்டதட்ட 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குபியா டவுனிலும் இதே போன்று மசூதி ஒன்றினுல் நுழைந்த இரண்டு பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்து நாசத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications