துபாயில் ஆடல் பாடல் பயிற்சி முகாம்.... உற்சாகத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
துபாய்: துபாயில் உள்ள ரேகா இசை மற்றும் நடனப் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான கோடைகால சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தியது. இதில் ஏராளமான குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று அசத்தினார்கள்.
துபாயில் ரேணுகா மற்றும் ஹரிதா ஆகிய இரு பெண்கள் ஒன்றாக சேர்ந்து துபாய் ரேகா இசை மற்றும் நடனப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளை வாசித்து அரங்கில் இருந்தவர்களை அசத்தியுள்ளனர்.
இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள் ஹைதர் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடனமாடியும், இசை ஆசிரியர்கள் நௌஷத் மற்றும் ரேணுகா ஆகியோர் பாடல்கள் பாடியும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

ஆடல் பாடல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, வீணாகப் போகும் பொருட்களில் இருந்து மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

இந்த விழாவில் புதிய தமிழ் இசைக்குழுவான "அந்தரா" அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதி பாடல்களை அந்தரா குழுவினர் பாடி மக்களை உற்சாகப் படுத்தினர்.












Click it and Unblock the Notifications