உணவு, தண்ணீர் எல்லாம் கட்! காசா மக்களை பட்டினி போட்டு.. இஸ்ரேல் "கொடூர" திட்டம்! பகீர் தகவல்
தெஹ்ரான்: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குச் செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான சூழலே உருவாகும்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடர்கிறது. அதிலும் சமீப காலங்களில் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர்: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது வடக்கு காசாவின் ஜபாலியாவில் தங்கள் ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
அந்த பகுதியை இஸ்ரேல் முழுமையாகச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அப்படி முழுமையாகச் சுற்றி வளைத்து உணவு மற்றும் தண்ணீரின்றி அங்குள்ள ஹமாஸ் போராளிகளை முடக்க முடக்கும். அதேநேரம் இப்படி அனைத்து மனிதாபிமான உதவிகளையும் முடக்குவது அங்குள்ள பல நூறு அப்பாவி பாலஸ்தீனியர்களையும் கூட பாதிக்கும் என்பதால் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பகீர் திட்டம்: இஸ்ரேல் நாட்டின் ஓய்வுபெற்ற ஜெனரல்கள் சிலர் இணைந்து இந்த திட்டத்தை நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளனர். அதன்படி வடக்கு காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு அந்த பகுதி மூடப்பட்டு ராணுவ மண்டலமாக அறிவிக்கப்படும்.
ஒரு வாரம் கழித்தும் வெளியேறாதவர்கள் அனைவரும் ஹமாஸ் படைகளாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு , உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்படும். மேலும், ராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்ட அவர்கள் மீது தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தும்.
வாழவே முடியாத சூழல்: வடக்கு காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கவே இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 'ஜெனரல்ஸ் திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஹமாஸ் தலைமையை அகற்ற உதவலாம் என்ற போதிலும் அதேநேரம் வடக்கு காசாவில் பொதுமக்கள் வாழவே முடியாத சூழலையும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் கை ஓங்கி இருக்கிறது என்ற போதிலும் ஹமாஸை முழுமையாக அழிக்க முடியில்லை. எனவே, ஹமாஸை முழுமையாக அழிக்க இதுவே ஒரே வழி என்று இந்தத் திட்டத்தைப் போட்டுத் தந்த இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்ட் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் இதுதான் ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே வழி: அவர் மேலும் கூறுகையில், "கடந்த 9, 10 மாதங்களாகவே வடக்கு காசாவில் இஸ்ரேல் படைகள் உள்ளன. இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அங்குள்ள அப்பாவி மக்களை உடனடியாக வெளியேற வேண்டும். இதற்கு ஒரு 10 நாட்கள் டைம் தரலாம். இஸ்ரேல் வழங்கும் பாதுகாப்பான வழித்தடங்கள் அவர்கள் வெளியேறலாம். இவ்வளவு டைம் கொடுத்தும் வெளியேறவில்லை என்றால் அவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆப்ஷன் இருக்கிறது. ஒன்று சரணடை வேண்டும்.. இல்லை என்றால் பட்டினி கிடைக்க வேண்டும்" என்றார்.
அதாவது அந்த பகுதிக்குச் செல்லும் அடிப்படை விஷயங்கள் எல்லாமே பிளாக் செய்யப்படும் என்பதால் சரணடை வேண்டும்.. அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற நிலையே இருக்கும். இஸ்ரேல் ராணுவம் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது உறுதி. அதேநேரம் இதை இஸ்ரேல் பாலோ செய்யுமா இல்லையா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications