Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணவு, தண்ணீர் எல்லாம் கட்! காசா மக்களை பட்டினி போட்டு.. இஸ்ரேல் "கொடூர" திட்டம்! பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குச் செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான சூழலே உருவாகும்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடர்கிறது. அதிலும் சமீப காலங்களில் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

israel israel palestine war hamas

இஸ்ரேல் பிரதமர்: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது வடக்கு காசாவின் ஜபாலியாவில் தங்கள் ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

அந்த பகுதியை இஸ்ரேல் முழுமையாகச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அப்படி முழுமையாகச் சுற்றி வளைத்து உணவு மற்றும் தண்ணீரின்றி அங்குள்ள ஹமாஸ் போராளிகளை முடக்க முடக்கும். அதேநேரம் இப்படி அனைத்து மனிதாபிமான உதவிகளையும் முடக்குவது அங்குள்ள பல நூறு அப்பாவி பாலஸ்தீனியர்களையும் கூட பாதிக்கும் என்பதால் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பகீர் திட்டம்: இஸ்ரேல் நாட்டின் ஓய்வுபெற்ற ஜெனரல்கள் சிலர் இணைந்து இந்த திட்டத்தை நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளனர். அதன்படி வடக்கு காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு அந்த பகுதி மூடப்பட்டு ராணுவ மண்டலமாக அறிவிக்கப்படும்.

ஒரு வாரம் கழித்தும் வெளியேறாதவர்கள் அனைவரும் ஹமாஸ் படைகளாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு , உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்படும். மேலும், ராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்ட அவர்கள் மீது தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தும்.

வாழவே முடியாத சூழல்: வடக்கு காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கவே இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 'ஜெனரல்ஸ் திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஹமாஸ் தலைமையை அகற்ற உதவலாம் என்ற போதிலும் அதேநேரம் வடக்கு காசாவில் பொதுமக்கள் வாழவே முடியாத சூழலையும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் கை ஓங்கி இருக்கிறது என்ற போதிலும் ஹமாஸை முழுமையாக அழிக்க முடியில்லை. எனவே, ஹமாஸை முழுமையாக அழிக்க இதுவே ஒரே வழி என்று இந்தத் திட்டத்தைப் போட்டுத் தந்த இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்ட் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் இதுதான் ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே வழி: அவர் மேலும் கூறுகையில், "கடந்த 9, 10 மாதங்களாகவே வடக்கு காசாவில் இஸ்ரேல் படைகள் உள்ளன. இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அங்குள்ள அப்பாவி மக்களை உடனடியாக வெளியேற வேண்டும். இதற்கு ஒரு 10 நாட்கள் டைம் தரலாம். இஸ்ரேல் வழங்கும் பாதுகாப்பான வழித்தடங்கள் அவர்கள் வெளியேறலாம். இவ்வளவு டைம் கொடுத்தும் வெளியேறவில்லை என்றால் அவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆப்ஷன் இருக்கிறது. ஒன்று சரணடை வேண்டும்.. இல்லை என்றால் பட்டினி கிடைக்க வேண்டும்" என்றார்.

அதாவது அந்த பகுதிக்குச் செல்லும் அடிப்படை விஷயங்கள் எல்லாமே பிளாக் செய்யப்படும் என்பதால் சரணடை வேண்டும்.. அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற நிலையே இருக்கும். இஸ்ரேல் ராணுவம் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது உறுதி. அதேநேரம் இதை இஸ்ரேல் பாலோ செய்யுமா இல்லையா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+