உறைய வைக்கும் படுகொலை... 20 லட்சம் பறவைகளைக் கொன்ற சைபீரிய வேட்டைக்காரர்கள்!
நிகோஸியா, சைப்ரஸ்: மைக்ரேஷனாக சைபீரியாவுக்கு வந்த 20 லட்சம் வெளிநாட்டு பறவைகளை சைபீரிய வேட்டைக்காரர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் வேட்டையாடிக் கொன்று விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியு்ளது.
பேர்ட்ஸ் லைப் என்ற தொண்டு நிறுவனம் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது. இனப் பெருக்கத்திற்காக ஒரு இடத்திலிருந்து இடம் மாறி வேறு இடம் செல்வது பறவைகளின் வழக்கம். வலசை போவது என்று இதைச் சொல்வார்கள்.
இப்படி வலசை போன கிட்டத்தட்ட 20 லட்சம் பறவைகளை, கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரையில் சைபீரிய வேட்டைக்காரர்கள் வேட்டையாடி கொன்றுள்ளதாக பேர்ட்ஸ் லைப் தெரிவித்து்ளது.
இடம் பெயரும் பறவைகள்...
ஒவ்வொரு ஆண்டும் வடதுருவ பகுதியில் நிழவும் கடும் குளிரை சமாளிப்பதற்காக பல லட்சம் பறவைகள் இடம் பெயர்ந்து சைபீரியாவுக்கு வருவது வழக்கம்.
வேட்டைக்காரர்கள்...
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்கு உள்ள வேட்டைக்காரர்கள் வலைகளையும் பொறிகளையும் பயன்படுத்தி பறவைகளை பிடித்து, சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் இவைகள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.
கண்டு கொள்ளாத ராணுவம்...
அந்நாட்டு அரசாங்கம் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை என்றும், அப்பகுதியில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவமும் இதை கண்டுக்கொள்வது இல்லை என கூறப்படுகிறது.
கோரிக்கை...
வரும் இலையுதிர் காலத்திலாவது இந்த சட்டவிரோத வேட்டையை தடுக்க வேண்டும் என பேட்ர்ட்ஸ் லைப் கோரிக்கை விடுத்துள்ளது.