'ப்ளீஸ் என்னை விட்டுவிடு...’ கொலையாளியிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர் - போனில் துடித்த கணவர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர், தாக்குதலுக்கு முன்னர் கொலைகாரனிடம், ‘நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு' என கெஞ்சியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபா அருண் குமார், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபா, மர்மநபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிட்னி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த போது, பிரபா தனது கணவரிடம் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். எனவே, இது தொடர்பாக பிரபாவின் கணவர் அருணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ‘எனது மனைவி கொலைக்காரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார். நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. பின்னர் எதுவும் செல்போனில் கேட்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து, அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார் என காவல்துறை தரப்பு கூறுகிறது. தொடர்ந்து பிரபாவின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மேற்கு சிட்னியில் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்துடன் இதற்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே இது போன்று அப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரபா அப்பகுதியில் நடந்துவரும் சி.சி.டி.வி. வீடியோவையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications