போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சிரியா மீது ஐ.நா. குற்றச்சாட்டு: அதிபர் ஆசாத் மறுப்பு !
டமாஸ்கஸ்: சிரியாவில் போர்க்குற்றங்கள் நடப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிபர் ஆசாத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபராக பசார் அல் ஆசாத் இருந்து வருகிறார். எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் 2011-ம் ஆண்டு அந்த நாட்டு அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில் சிரியாவிலும் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவானது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி படையினர் அரசு படைகளை தாக்கின. இரு தரப்புக்கும் இடையே 4 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.

இதில் இதுவரை 2 லட்சத்திக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அரசு படைக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் சண்டை நடந்து கொண்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டனர்.
ஒரு பக்கம் கிளர்ச்சி படையின் தாக்குதல், மற்றொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் என சிரியா நாடே சின்னாபின்னமாகியது. இதையடுத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் சிரியாவிற்கு உதவ அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் களத்தில் இறங்கின.
இந்நிலையில். சிரிய அதிபர் பசார் அல் ஆசாத் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போரின் போது போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அதிபர் ஆசாத், இது அரசியல்மயமாக்கப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளை ஆசாத்தின் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அழிப்பதாக கூறி ஐ.நா. சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது. மேலும், அதிபர் ஆசாத்தின் ஆட்சியில் போர்க்குற்றங்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அதிபர் ஆசாத், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் குறிபிட்டுள்ளார்.
-
போரின் பயத்தை வென்ற மனிதநேயம்.. பஹ்ரைனில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட 'அன்னை தமிழ் மன்றம்' -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications