இயற்கையை பாதுகாப்பது இந்தியர்களின் பண்பாடு: பாரீஸ் பருவநிலை உச்சிமாநாட்டில் மோடி உரை
பிரான்ஸ்: "பருவநிலை மாற்றம் என்பது உலகு எதிர்கொண்டுள்ள பெரிய சவால். இதை உடனடியாக உலகம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நாங்கள் காரணம் இல்லை. இயற்கை மற்றும் மனிதர்கள் நடுவே ஒரு சமத்தன்மையை நாம் பேணியாக வேண்டும். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை இம்மாநாட்டில் எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். இந்தியாவில் இயற்கையை தாயாக மதிக்கும் பண்புதான் கலாசாரமாகவே இருந்துவருகிறது. நாம் இன்று பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளோம். எனவேதான், பாரீசில் வெளியாகும் முடிவுக்காக காத்திருக்கிறோம்." என்று பிரதமர் நரேந்திரமோடி, பாரீசில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றடைந்தார்.
COP 21 எ அழைக்கப்படும் இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய நேரப்படி இன்று மாலை மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது: இந்த மாநாடு இந்திய எதிர்காலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய கலாசாரத்தின் ஜன்னல்.
பருவநிலை மாற்றம் என்பது உலகு எதிர்கொண்டுள்ள பெரிய சவால். இதை உடனடியாக உலகம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நாங்கள் காரணம் இல்லை. இயற்கை மற்றும் மனிதர்கள் நடுவே ஒரு சமத்தன்மையை நாம் பேணியாக வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை இம்மாநாட்டில் எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.
இந்தியாவில் இயற்கையை தாயாக மதிக்கும் பண்புதான் கலாசாரமாகவே இருந்துவருகிறது. நாம் இன்று பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளோம். எனவேதான், பாரீசில் வெளியாகும் முடிவுக்காக காத்திருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் எரிபொருள் உற்பத்தியில் 40 சதவீதம், இயற்கையோடு இணைந்ததாக மாற்றப்படும்.
உலகம் முழுக்க நன்றாக இருக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
முன்னதாக, பரம்பரா என்ற பெயரிலான பெவிலியன் ஒன்றை பார்வையாளர்களுக்காக மோடி அர்ப்பணித்தார். அதில் இந்தியாவில் எப்படியெல்லாம் இயற்கை வணங்கப்பட்டு வந்தது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications