தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி
தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
காபூல்: அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கெடுவிதிக்கப்பட்டு முற்றிலுமாக வெளியேறின.
இதைதவிர, ஆட்சி அமைப்பதில் நிறைய குழப்பங்கள், சிக்கல்கள் தாலிபான்களுக்குள் நடந்து வருகிறது.. மற்றொரு பக்கம், தாலிபான்கள் ஆட்சி எப்படி இருக்குமோ என்று நினைத்து ஆப்கன் மக்கள் நிலைகுலைந்து பயந்து போயுள்ளனர்..

நிகழ்ச்சி
இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.. அதில், தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்..
அந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் உள்துறை அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானியும் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டினார்.. புகழ்ந்து தள்ளினார்.. அவர்களை தியாகிகள் என்றார்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் வீரர்கள் என்றார்.. இஸ்லாம் மதத்தின் ஹீரோக்கள் என்றார். அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே, தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தலிபான் இயக்கத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 10,000 ஆப்கன் நாணயம் ஆப்கனிக்களை வழங்கினார்..
Recommended Video

ஹைலைட்
கடைசி ஹைலைட்டாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இது அத்தனையையும், அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்தி ட்வீட் போட்டு வெளிப்படுத்தினார்.. இந்த ட்வீட்தான் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதற்கு ஏராளமானோர் திரண்டு வந்து தங்கள் கமெண்ட்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்..

பயங்கரவாதிகள்
ஒருபக்கம் உலக நாடுகளின் முன், தலிபான்கள் தங்களை பொறுப்பான ஆட்சியாளர்களாக நிலைநிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார்கள்.. மற்றொரு பக்கம், தற்கொலை தாக்குதல் நிகழ்த்திய தலிபான் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தும் உள்ளனர்.. இது அந்த இயக்கத்தின் தலைமையின் அணுகுமுறையில் உள்ள முரண்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications