இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ஆனால் ஒன்று.. போகாத ஊருக்கு வழி தேடும் இம்ரான்
Recommended Video
இஸ்லாமாபாத்: காஷ்மீரை இரண்டாக பிரித்த நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற்றால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு அந்தஸ்து இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
அது போல் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றப்பட்டது.

இந்தியா நடவடிக்கை
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கைவிட்டு போகும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் இந்தியாவின் நடவடிக்கைக்கு அதிரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்
இதையடுத்து பாகிஸ்தான், உலக நாடுகளை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தது. எனினும் ஏமாற்றமே விஞ்சியது. சீனாவை தவிர்த்து எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதாக இல்லை.

தீவிரவாதம்
காஷ்மீர் குறித்து இந்தியாவின் நடவடிக்கையை இந்த உலகம் தடுக்க தவறினால் இந்தியாவுடன் போர் தொடுக்கவும் தயார் என இம்ரான் கான் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவோ தீவிரவாதத்தை ஒதுக்கிவைத்து விட்டு பாகிஸ்தான் வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறிவிட்டது.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் காஷ்மீர் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடங்குவோம். அது போல் ராணுவம், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றையும் இந்தியா திரும்ப பெற வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துவிட்டார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications