மலேசியாவில் தத்தளிக்கும் 200 இந்திய மாணவர்கள் = அழைத்துவர சிறப்பு விமானம் ஏற்பாடு
மணிலா: பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தவித்த இந்திய மாணவர்கள் 200 பேரை அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் எல்லாருடைய நிம்மதியையும் கெடுத்து வருகிறது. உள்ளூர், வெளிமாநிலவாசிகளை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் படிப்பதற்காகவும் வேலைநிமித்தமாகவும் சென்றுள்ளவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி
ஏற்கெனவே சீனா, ஜப்பான் கப்பலில் இருந்த இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டெடுத்தது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் இந்தியாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். கொரோனா பரவுவதை தடுக்க அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

தண்ணீர்
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றாலும் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். அதில் ஒருவரால் மற்ற அனைவருக்கும் உணவு, மருந்து, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை எப்படி வாங்கி வர முடியும். வாங்குவது சரி எப்படி சுமந்து வருவது.

பூர்த்தி
உணவு உள்ளிட்ட பொருட்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் கால் டேக்ஸிகளும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் உணவு தேவையை கூட பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.

அரசு மீட்க வேண்டும்
இந்த நிலையில் சொந்த நாடுகளுக்கு திரும்பலாம் என்றாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் உள்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப விமானத்தில் வந்தனர். இதனிடையே சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர்களது விமானம் மலேசியாவில் தரையிறங்கியது. தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களை இந்திய அரசும், மாநில அரசுகளும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமானம் ஏற்பாடு
இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது. 200 பேரையும் மீட்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications