அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளான தமிழர் சிவா அய்யாதுரை.. அதிர்ச்சி வீடியோ!
அமெரிக்காவில் சென்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தமிழரான சிவா அய்யாதுரை, அமெரிக்கர் ஒருவரால் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவில் சென்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தமிழரான சிவா அய்யாதுரை, அமெரிக்கர் ஒருவரால் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இமெயிலை முதல்முதலாக கண்டுபிடித்து அதை பயன்படுத்தியவர் சிவா அய்யாதுரை. தமிழகத்தில் சிவகாசியை சேர்ந்த இவர், தன்னுடைய சிறுவயதில் இருந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். அறிவியல் தொழில்நுட்பம், அரசியல் என்று பல துறைகளில் அவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நடக்கும் சென்ட் உறுப்பினர் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். தற்போது அங்கு சென்ட் உறுப்பினராக இருக்கும் எலிசபெத் வாரன் என்ற பெண்ணுக்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
.@SenWarren YOU’ve got til MON. 7/30 5PM to unequivocally condemn THE attack & deliver my family & I a APOLOGY. A RACIST White guy attacked a Black Indian Man. INSTEAD OF condemning the attack, YOU sheltered him IN YOUR “town hall.” Do #BlackLivesMatter or do you exploit race? pic.twitter.com/zRQcA6W0Fz
— Dr. Shiva Ayyadurai,PhD (M.I.T.) Inventor of Email (@va_shiva) July 26, 2018
இரண்டு நாள் முன்பு மாசசூசெட்ஸ் பகுதியில் உள்ள டவுன் ஹால் பகுதியில் இதற்காக அவர் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் எலிசபெத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு வந்த, எலிசபெத்தின் ஆதரவாளர் பால் ஸோலோவி, சிவா அய்யாதுரையை தாக்கி உள்ளார்.
சிவாவை மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு, அவர் வைத்திருந்த மைக் மூலம் அவரை தாக்கினார். இதில் சிவாவிற்கு உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இந்த வீடியோவைய் பகிர்ந்து அமெரிக்காவில் இருக்கும் நிறவெறி குறித்து சிவா அய்யாதுரை வருத்தப்பட்டுள்ளார்.
அதேபோல் அவர் இதுகுறித்து வழக்கும் தொடுத்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பால் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார்.