மலேசியாவில் ராஜபக்சேவை முடக்கிய தமிழர்கள்... 3 நாட்கள் தொடர் போராட்டம் #rajapaksa
கோலாலம்பூர்: மலேசியாவில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழர்கள் 3 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மலேசியாவில் ராஜபக்சே ரகசிய அறைகளில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையக் கட்டத்தில் ஆசிய அரசியல் கட்சிகளின் 9-வது அனைத்துலக மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மலேசியா சென்றிருந்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்சே கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எதிர்ப்பை மலேசிய மண்ணில் அவர் எதிர்கொள்ள நேரிட்டது. அவர் பங்கேற்ற கருத்தரங்க மையம், தங்கியிருந்த ஹோட்டல்கள் அனைத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இதனால் ராஜபக்சேவால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவானது. இந்தப் போராட்டத்தின் போது மலேசியாவுக்கான இலங்கை தூதர் தாக்கப்பட்டதால் பதற்றமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications