நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க சிலிக்கன்வாலியில் அறப் போராட்டம்
சிலிக்கன்வாலி: நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சிலிக்கன்வாலியில் தமிழர்கள் ஒன்று திரண்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.
விவசாயத்தை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இருக்கும் நெடுவாசல் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. தங்களது தார்மீக ஆதரவை தெரிவித்து அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் தங்களது ஆதரவை போராட்டம் மூலம் தெரிவித்து வர ஆரம்பித்துள்ளனர்.

சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழர்கள் பிரிமான்ட் நகரில் ஒன்று கூடி மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டோர் பிராக்களிங் தொழில்நுட்பம் எவ்வாறு விவசாயத்தை அழிக்கும் என்றும் அமெரிக்காவிலும் இந்த தொழிற்நுட்பம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினர்.
அமெரிக்காவின் ஒக்லகாமா மாநிலத்தில் பிராக்கிளிங் செய்ததன் மூலம் தற்போது நிலநடுக்கும் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதையும், தண்ணீர் மாசடைந்து ஒட்டு மொத்த விவாசாயம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைந்ததையும் விளக்கி கூறினர்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நெடுவாசல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் மூலம், தமிழர்கள் எங்கிருந்தாலும் உணர்வால் ஒன்றுபடுவர் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications