பிரிட்டன் ஸ்டீல் ஆலையை மூட டாடா திடீர் முடிவு- 15,000 பேர் வேலை இழப்பு... கேமரூன் அவசர ஆலோசனை
லண்டன்: பிரிட்டன் ஸ்டீல் ஆலையை மூடப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
மும்பையை தலைமையிடமாக கொண்ட டாடா நிறுவனம், 2007-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள ஆங்கிலோ-டச்சு நிறுவமான கோரஸ் ஸ்டீல் ஆலையை சுமார் ரூ53,460 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் இந்நிறுவனத்தின் பெயர் டாடா ஸ்டீல் யூரோப் என மாற்றப்பட்டது.

கோரஸ் நிறுவனம் உலகின் 5-வது முன்னணி ஸ்டீல் நிறுவனமாகும். இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனத்தை மிகப் பெரிய தொகைக்கு வாங்கியது அதுவே முதல்முறையுமாகும்.
தற்போது 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரிட்டன் ஸ்டீல் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாது என்ற முடிவுக்கு டாடா நிறுவனம் வந்துள்ளது. மோசமான நிதி நிலை காரணமாகவே டாடா ஸ்டீல் நிறுவனத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய சந்தையில் 2-வது மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக இந்நிறுவனம் இருக்கிறது. டாடா குழுமத்தின் இம்முடிவு பிரிட்டன் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 15,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் டாடா நிறுவனத்தின் இம்முடிவால் வேல்ஸின் தால்போட் துறைமுகமும் மிகக் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும். அங்கு பணிபுரியும் 4,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அந்த துறைமுகத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையே 5,500.
இதனைத் தொடர்ந்து இது குறித்து இன்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதனிடையே இதுபோன்ற நிலைமைகள் எதிர்காலத்தில் உருவாகாமல் இருக்க பிரிட்டன் அரசு ஸ்டீல் ஆலைகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications