துபாயில் ஆசிரியர் தின சிறப்பு கவியரங்கம்: 'பெருமை'யாய் கவி பாடிய தமிழர்கள்
துபாய்: துபாயில் தமிழ்த்தேர் நண்பர்கள் இலக்கியச் சந்திப்பு 5.09.2014 அன்று ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கமாக காலை 10.00 மணி அளவில் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தேர் உறுப்பினர் திருமதி. ஸ்வேதா கோபால் அவர்களின் பெற்றோர் திருமதி. மீனாட்சி மற்றும் திரு. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிஞர் ஜியாவுதீன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர்- நண்பர்கள் கவிஞர் ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லா, கவிஞர் காவிரிமைந்தன், கவியன்பன் கலாம், ஹெல்த் கணேசன், எஸ். ரமணி, கவிஞர் ஆதிபழனி, திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ் பானு, கவிதாயினி ஸ்வேதா கோபால், ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ஷேக் ஹிதாயத்துல்லா, காமராஜ், சையது உமர், ரத்தினவேல், அப்துல்லா, சக்திவேல், ராம்விக்டர் லட்சுமி நாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கவிஞர் காவிரிமைந்தன் தொகுப்புரை வழங்கிட கவியரங்கத் தலைமை ஏற்ற திருமதி நர்கீஸ் பானு வரவேற்புரை நல்கினார். குறிப்பாக ஆசிரியையாக பணிபுரியும் திருமதி. நர்கீஸ் ஆசிரியர்தினத்தன்று கவியரங்கத் தலைமை ஏற்றது அனைவரின் பாராட்டைப் பெற்றது. அவருக்கு திருமதி. மீனாட்சி அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
கவியரங்கில் பெருமை என்னும் தலைப்பில் கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், திண்டுக்கல் ஜமால், அதிரை கவியன்பன் கலாம், ஜெயராமன் ஆனந்தி, ஸ்வேதா கோபால், ந.சந்திரசேகர் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிறைவுக் கவிதையாக நர்கீஸ் பானு தனது கவிதையை வழங்கினார். தமிழகத்திலிருந்து கவிதை அனுப்பிய நண்பர் அத்தாவுல்லா கவிதையும் கவியன்பன் கலாம் அவர்களால் வாசிக்கப்பட்டது.
திருமதி. மீனாட்சி அவர்கள் தனது மகளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் வளர்த்ததில் பெரும்பங்காற்றியதையும், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் பற்றி அறிமுகம் தந்து படிக்கின்ற ஆர்வத்தை தூண்டியதையும் கவிஞர் காவிரிமைந்தன் குறிப்பிட்டு நல்லதோர் பெண்மணியை இலக்கிய ஆர்வத்துடன் வளர்த்திட்ட பெற்றோருக்கு தமிழ்த்தேர் சார்பில் நன்றி தெரிவித்தார்.

தமிழ்த்தேர் இதழின் 82வது சிறப்பு இதழாக பெருமை இதழ் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை திரு. வெங்கட்ராமன் வெளியிட திரு. லட்சுமிநாராயணன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை திருமதி. மீனாட்சி வெளியிட திரு. சையது உமர் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை திரு.சக்திவேல் வெளியிட திரு. காமராஜ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திருமதி. மீனாட்சி அவர்கள் பெருமை பற்றிய கவிதை ஒன்றை வழங்கி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார். அதே போல் திரு.வெங்கட்ராமன் அவர்கள் தன் பங்கிற்கு நகைச்சுவை கதையொன்றை பகிர்ந்து வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வோடு வாழ்வது சிறந்தது என்று குறிப்பிட்டார்.
பெற்றோரின் சார்பில் ஏற்புரை நிகழ்த்திய திருமதி. ஸ்வேதா கோபால் மனம் நெகிழ்ச்சியில் தத்தளிப்பதாகவும் இந்த நாள் தங்களால் மறக்க முடியாத ஒரு நாள் என்றும் கூறி தனது பெற்றோரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கச் செய்து கெளரவித்தமைக்காக தமிழ்த்தேருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு முதுவை ஹிதாயத்துல்லா பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசை ஹெல்த் கணேசன் வழங்கினார். திருமதி. மீனாட்சி அவர்களுக்கு திருமதி. ஸ்வேதா பொன்னாடை அணிவிக்க, காவிரிமைந்தன் நினைவுப்பரிசு வழங்கினார்.
இதழ்கள் ஒவ்வொன்றும் சிறப்பாய் உருவாக்கி தன் ஆர்வத்தின் பிரதிபலிப்பாய் ஒவ்வொரு இதழையும் பெருமைப்படுத்திவரும் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் இருவரும் இணைந்து அளித்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த இதழில் இதுவரை வெளிவந்த தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பெருமைக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.
வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேருக்கு திரு. ராம்விக்டர், திரு. அப்துல்லா, திரு. லட்சுமிநாராயணன் ஆகியோர் வாழ்த்துரைக்க, நிகழ்ச்சியில் அனைவரையும் குறிப்பிட்டு கவிஞர்களின் சிறப்பான வரிகளையும் சுட்டிக்காட்டி நன்றியுரையாற்றினார் திரு.ரமணி அவர்கள்.

முதன் முறையாக பங்கேற்ற திரு. அப்துல்லா அவர்கள் முழுக்க முழுக்க தூய தமிழில் உரையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இங்கே அரங்கத்தில் அனைவருமே தங்களுக்குள் உரையாடும்போதும், மேடையில் உரையாற்றும்போதும் தமிழில் மட்டுமே பேசுவோம் என்று தீர்மானிக்க வேண்டுகோள் விடுத்தார். அன்றாட வாழ்க்கையில் இரண்டறக்கலந்திருக்கும் மொழிவிடுத்து அன்னைத் தமிழில் பேச அழைப்புவிடுக்கும் நிலை வருத்தமே தந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த முயல்வோம் என்று நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், ஜியாவுதீன், எஸ். ரமணி, குளச்சல் இப்ராஹிம் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
அடுத்த தலைப்பு "அருவி" என்கிற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications