கற்பு விற்பனைக்கு.. கல்லூரி மாணவியை 2 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய அபுதாபி தொழிலதிபர்!
Recommended Video
பெர்லின்: கல்லூரி மாணவி ஒருவர் தனது கற்பை ஏலத்தில் விட்ட நிலையில் கடும் போட்டா போட்டிக்கு நடுவே சுமார் 2.5 மில்லியன் யூரோ செலவிட்டு அபு தாபியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் அவரை வாங்கியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த, 19 வயதாகும் டீனேஜ் மாணவி கிசெல்லே. இவர் ஜெர்மனியை சேர்ந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற வெப்சைட்டில் தனது கற்பை ஏலத்தில் விட்டார். இதுவரை தான் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவில்லை என அவர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அவரது கற்புக்கு கடும் போட்டா போட்டி ஏற்பட்டது.
பயங்கர போட்டி
ஏலத்தின் முடிவில் அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 2 மில்லியன் யூரோ அளவுக்கு இவர் ஏலம் போயுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இதில் போட்டியில் இருந்தார். ரஷ்யாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரும் விடாமல் கிசெல்லேவை விரட்டி பார்த்தார். ஆனால் சிறு அளவிலான பண மதிப்பில அபுதாபி தொழிலதிபர் கிசெல்லேவை விலைக்கு வாங்கிவிட்டார்.
|
ஒரே குஷி
இதுகுறித்து கிசெல்லே மகிழ்ச்சியோடு கூறுகையில், "நான் 2.5 மில்லியன் யூரோ மதிப்புக்கு விலைக்கு போவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நனவாகிவிட்டது" என்கிறார். படிப்பு செலவு மற்றும் ஊர் சுற்றும் செலவுக்காகவே கற்பை கொடுக்க அவர் முன் வந்து ஏலத்தில் பங்கேற்றதாக கூறுகிறார்.
ஹோட்டல் அறை ரெடி
கிசெல்லேவை வாங்கிய தொழிலதிபர் ஜெர்மனிக்கு வர உள்ளாராம். இதற்காக ஜெர்மனியில் ஹோட்டல் அறை ஒன்று புக் செய்யப்பட்டுள்ளது. அங்கு வைத்து கிசெல்லே, தொழிலதிபருடன் உறவு கொண்டு அவரின் கற்பை பரிசளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடத்தும் நிறுவனம் சார்பில் கிசெல்லே பாதுகாப்பாக ஹோட்டலுக்கு சென்று திரும்ப பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளதாம்.
ரஷ்யஅழகி
சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் வெப்சைட் 2016ல் ஒருமுறை இதேபோன்ற காரணத்திற்காக பேமஸ் ஆனது. அப்போது 18 வயது ரஷ்யா மாடல் அழகி அலெக்சான்ட்ரா தனது கற்பை 2 மில்லியன் யூரோவிற்கு விற்பனை செய்திருந்தார்.