கண்ணிமைக்கும் நேரத்தில்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் துப்பாக்கி சூடு.. பலர் பலி: டென்மார்க்கில் பயங்கரம்
கோபன்ஹேகன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்
டென்மார்க்: கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.. இதில், பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்.. இங்கு ஃபீல்ட்ஸ் என்ற பிரபலமான ஷாப்பிங் சென்டர் இயங்கி வருகிறது.. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், ஏராளமானோர் இங்கு குவிந்திருந்தனர்.
அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.. இதில் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் சுருண்டு சுருண்டு விழுந்தனர்.. என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பலர் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

சடலங்கள்
அதற்குள் பாதுகாப்பு போலீசாரும் அங்கே குவிந்தனர்.. 3 பேர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து உயிரிழந்திருந்தனர்.. பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.. இதையடுத்து, 22 வயதான டேனிஷ் என்ற இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றியதுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதில் 3 பேரின் நிலைமை சீரியஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. இந்த சம்பவம் குறித்து டென்மார்க் போலீசார் சொல்லும்போது, டேனிஷ் என்ற இளைஞர் கைதாகி உள்ளார், இது "பயங்கரவாதச் செயல்" என்பதை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தனர்... துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்களுக்கு பிறகு அதிகாரிகள் நகரத்தில் உள்ள ஃபீல்ட் மாலுக்கு அனுப்பப்பட்டதாக கோபன்ஹேகன் போலீசார் தெரிவித்தனர்.. மேலும் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் மக்களை, தங்கி உதவிக்காக காத்திருக்குமாறும் அறிவுறுத்தினர்.

ஷாப்பிங் மால்
இந்த ஒரு இடம் தவிர வேறு எங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்கிறார்கள் போலீசார்.. இந்த துப்பாக்கி சூடு பற்றிய தகவல் அறிந்ததும், மீடியாக்கள் சம்பவ இடத்தில் குவிந்தன.. இதையடுத்து, அதிக ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகளையும், அந்த மாலில் இருந்து மக்கள் வெளியே ஓடுவதையும் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் வெளியிட்டுள்ளன.. குழந்தையை சுமந்தபடி, அந்த மாலில் இருந்து முகம் நிறைய பயத்துடன் ஒரு பெண் வெளியேறுவது போலவும், ஆம்புலன்ஸில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஒருவரை, மீட்புப் பணியாளர்கள் கொண்டு செல்லப்படும் போட்டோவும் இடம்பெற்றுள்ளது.

கோபன்ஹேகன்
மேலும், ஆயுதம் ஏந்தி நிற்கும் போலீசார் போன்ற படங்களும் வெளியாகி உள்ளன. இப்போதைக்கு சம்பவ இடத்தில் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது... இருந்தாலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பிரதான காரணம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.. அதேசமயம், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்பது குறித்தும் உறுதியாக தகவல் தெரியவில்லை என்கிறார் கோபன்ஹேகன் மேயர் சோபி ஆண்டர்சன்..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications