4 பேரைக் கொன்று விமானத்தைத் திருடிய 67 வயது தாத்தா... மரண தண்டனை!
ஹவுஸ்டன்: அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்து வந்தவர் போவர். இவருக்கு சிறிய விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக சிறிய விமானம் வைத்திருந்த ஒருவரிடம் சென்று பேரம் பேசியுள்ளார். கேட்ட விலைக்கு விமானத்தைத் தர உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரையும், அவருடன் இருந்த மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் போவர். பின்னர், அந்த விமானத்தையும் அவர் திருடிச் சென்றார்.

இந்தச் சம்பவம் நடந்தது கடந்த 1983ம் ஆண்டு. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போவரைக் கைது செய்தனர். விசாரணையின் முடிவில் போவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து போவர் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் போவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணமடைந்த போவருக்கு தற்போது வயது 67 ஆகும். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு பேரைக் கொன்ற வழக்கில் தற்போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் மாகாண அரசு, 1982ல் அதாவது போவர் குற்றம் புரிவதற்கு முந்தைய ஆண்டுதான், மரண தண்டனை சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது. இம்மாகாணத்தில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 526 பேரில் போவர் தான் வயது மூத்தவர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications