Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்க போகுது.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர்.. அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கீவ்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் அமெரிக்காவே ஆகாது என்கிற நிலையில், அந்த நாட்டின் ராணுவத்துடன் சேரும் உக்ரைனின் முடிவு ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்து. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ உதவி செய்த தைரியத்தில் உக்ரைன் போரில் குதித்தது. ஆனால் இன்று அமெரிக்கா ரஷ்யா இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதல் நடத்தாது என்று உறுதியளித்தால் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முடிவை கைவிட தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இது ரஷியா தனக்கு எதிரான அத்துமீறலுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என உக்ரைன் நினைத்தது. ஏனெனில் ரஷ்யா உக்ரைன் இடையே மோதல்கள் இருந்து வந்தது. இதன் காரணமாக உக்ரைன் நோட்டோவில் இணைவதற்கு, தொடக்கம் முதல் ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் இந்த முயற்சியை கைவிடாததால் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

The good thing that Russia was hoping for is about to happen Ukrainian president has backed down

4 ஆண்டுகளை நெருங்கியும் இந்த போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் ரஷ்யாஉடன் சண்டை செய்த வருகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் இன்று வரை முடிவுக்கு வராத காரணத்தால் கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா.

ரஷ்யா இத்தனை வருடங்கள் கடந்து சண்டை செய்ய, சீனா மற்றும் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்தான் காரணம் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதனால் தான் இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்தது. இதுஒருபுறம் இருந்தால் சண்டை போதும், பேசி தீர்க்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுக்கொடுப்பது உள்பட 28 நிபந்தனை அடங்கிய ஒப்பந்தத்தை டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால் தனது நாட்டின் ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதனை நிராகரித்துவிட்டார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. ரஷ்யாவோ அமெரிக்காவின் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ஏற்றாலும், உக்ரைன் ஏற்கவில்லை.. இது தான் போர் முடிவுக்கு வராமல் இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட உக்ரைனை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு வரும்நிலையில் உள்ளது.

இந்தநிலையில் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பு போர் நிறுத்தம் தொடர்பாக சில கருத்துகளை அவர் சமூகவலைதளத்தில் கூறினார். உக்ரைனை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே நேட்டோ கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் சில உறுப்பு நாடுகள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.

இதனால் நேட்டோ கூட்டமைப்பில் சேர வேண்டும் என்று உக்ரைன் இனி அழுத்தம் கொடுக்காது. அதேசமயம் பிராந்திய அமைதி மற்றும் உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்ற உத்தரவாதத்தை உக்ரைன் விரும்புகிறது. அதேநேரம் ரஷ்யாவிற்கு எந்தவொரு பகுதியையும் உக்ரைன் விட்டுக்கொடுக்காது. இந்த உத்தரவாதங்களை அளித்தால் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முடிவை கைவிட தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+