தாய் நிராகரித்ததால்.. பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டி குரங்கு.. மனதை உருக்கும் சம்பவம்!
டோக்கியோ: கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோஷியல் மீடியாக்களில் ஒற்றை பென்குயின்தான் ஹாட் டாபிக். இந்த வாரம், அந்த இடத்தை ஜப்பானை சேர்ந்த ஒற்றை குரங்கு பிடித்திருக்கிறது. குரங்கு பொம்மையுடன் வலம் வரும் இந்த குட்டி குரங்கு, அப்படி என்னதான் செய்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சோஷியல் மீடியா முழுவதும் இந்த குட்டி குரங்கு பற்றி வீடியோக்கள்தான் பரவலாக ஷேராகி வருகின்றன. ஆரஞ்சு நிறத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் போகும் குட்டி குரங்குக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

என்ன நடந்தது?
சோஷியல் மீடியாக்களில் வரும் வீடியோவில் இருப்பது, ஜப்பான் நாட்டை சேர்ந்த மக்காக் வகை குரங்கு குட்டியாகும். இந்த வகை குரங்குகள் ரொம்பவும் புத்திசாலித்தனமானவை. பனி பிரதேசத்தில் வாழும் இவை, உணவுகளை கழுவி உண்ணவும், உப்பு சுவைக்காக கடல் நீரை சேர்த்துக்கொள்ளவும் தெரிந்து வைத்திருக்கின்றன. அவ்வளவு ஏங்க, மனிதர்களை போல உடலை சூடாக வைத்துக்கொள்ள வெந்நீர் தொட்டிகளில் குளிக்கவும் கூட செய்யும். ஜப்பான் நாட்டில் இயற்கையாக வெந்நீர் ஊற்றுக்கள் நிறைய இருக்கின்றன.
தனிமையில் குட்டி குரங்கு
ஜப்பானில் இச்சிகாவா எனும் உயிரியல் பூங்காவில் இந்த குரங்குகளில் சில வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்பட்ட குரங்குகளில் ஒரு பெண் குரங்கு குட்டிகளை பெற்றெடுத்திருக்கிறது. இந்த குட்டிகளில் ஒன்றை அதன் தாய் சேர்த்துக்கொள்ளவே இல்லை. குட்டி நெருங்கி வரும்போதெல்லாம் தாய் குரங்கு அதை தள்ளி விட்டிருக்கிறது. இதனால், அந்த குட்டி கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒராங்குட்டான் பொம்மை
வழக்கமாக இந்த வகை குரங்குகள், முதல் முறையாக பிரசவிக்கும்போது குட்டிகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பது சகஜமான ஒன்றுதான். எனவே தனித்து விடப்பட்ட குரங்கு குட்டிக்கு 'பன்ச்' என பெயரிட்ட உயிரியல் பூங்கா அதிகாரிகள், குரங்கு குட்டிக்கு தனிமை தெரியாமல் இருக்க ஆரஞ்சு நிறத்தில் ஒராங்குட்டான் பொம்மை ஒன்றை பரிசாக கொடுத்திருந்தனர்.
Lord please take away all of Punch pain away and give it to Diddy instead pic.twitter.com/Vn3tf0I0RB
— kira 👾 (@kirawontmiss) February 19, 2026
தனிமையே துணை
இப்போது இந்த பொம்மையுடன்தான் குட்டி குரங்கு சுற்றி சுற்றி வருகிறது. தனது தாயிடம் நெருங்கும்போது, தாய் குரங்கு குட்டியை துரத்தி விடுவதால், குட்டி குரங்கு எங்கு போனாலும் பொம்மையுடன்தான் போகிறது. அது பொம்மையை விட்டு பிரிவதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் இன்னொரு குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த குட்டியின் தாய் 'பன்ச்' குட்டியை தாக்கியிருக்கிறது. இதனால் பயந்து போன 'பன்ச்' பொம்மை பின்னால் வந்து ஒளிந்துக்கொண்டது.
நெட்டிசன்கள் சப்போர்ட்
இது தொடர்பான வீடீயோதான் சோஷியல் மீடிக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் குரங்கு குட்டியை தத்தெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். என்னதான் குரங்காக இருந்தாலும் அதற்கும் பாசம், ஏக்கம், தனிமை எல்லாம் இருக்கத்தானே செய்யும் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications