ஹாஸ்பிட்டலில் நடந்த அசிங்கத்தை பாருங்க... கொரோனா பாதித்த வாலிபருடன்... உல்லாசமாக இருந்த நர்ஸ் கைது!
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதித்த வாலிபரும், நர்ஸும் உடலுறவில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பதும், நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் ஒருவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த புனிதமான காதல் ஒரு மோசமான காமத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. அதாவது அந்த நர்ஸ் மருத்துவமனை ஒரு புனிதமான இடம், அந்த வாலிபர் ஒரு நோயாளி என்பதை மறந்தும், அந்த வாலிபர் தான் ஒரு நோயாளி என்பதை மறந்தும், இருவரும் மருத்துவனை கழிவறைக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
அந்த நர்ஸ் தான் அணிந்திருந்த PPE கிட்டை அகற்றி வெளியே வைத்துவிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனை அங்கு இருந்த நோயாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவியது. இதுபற்றி மருத்துவமனை விசாரித்தபோது இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த வாலிபரையும், நர்ஸையும் போலீசார் கைது செய்தனர். நர்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே வேளையில் அந்த நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது வரும் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் ஏங்கி கொண்டிருக்க, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துமனையில் இந்த சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications