ஹெலிகாப்டரில் உடலை தொங்கவிட்ட தாலிபான்கள்.. கிளப்பி விட்ட நெட்டிசன்கள்.. ஆனால் உண்மை இதுதான்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு சுமார் 20 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டுள்ளது.
அமெரிக்க ராணுவம் அங்கு போருக்கு பயன்படுத்திய பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்று விட்டது.

ஹெலிகாப்டரில் உடல் தொங்கியதா?
அமெரிக்க ராணுவம் சென்றவுடன் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், அமெரிக்க படைகள் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்களை இயக்கி பார்த்தனர். இதேபோல் அமெரிக்கா விட்டுச் சென்ற பிளாக் ஹாக் ராக் ரக ஹெலிகாப்டரை தாலிபான்கள் வானில் இயக்கி பார்த்தனர். அப்போது ஹெலிகாப்டரின் கீழ் மனித உடல் ஒன்று தொங்கி கொண்டு இருப்பதாக கூறி அந்த வீடியோ வைரலானாது.

நெட்டிசன்கள் கருத்து
ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட மனிதரின் உடல் அமெரிக்க மொழி பெயர்ப்பாளர் என்று தகவல்கள் பரவின. ''தாலிபான்கள் அமெரிக்கன் பிளாக் ஹாக்கிலிருந்து(ஹெலிகாப்டர்) யாரையோ தொங்கவிட்டுள்ளனர். தாலிபான்களை இந்த கோர செயலை செய்ய விட்டதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடனை இந்த உலகம் ஒருபோதும் மன்னிக்காது'' என்று நெட்டிசன்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். தாலிபான்கள் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

உயிரோடு இருக்கிறார்
தற்போது இந்த ஹெலிகாப்டர் தொடர்பான ஜூம் செய்யப்பட்ட(பெரிதாக்கப்பட்ட) வீடியோவும், புதிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதாவது ஹெலிகாப்டரின் கீழே தொங்கி கொண்டிருக்கும் நபர் உயிரோடு இருப்பதும், அவர் கைகள் அசைவதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவின் ஆதாரத்திற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அந்த மனிதர் இறக்கவில்லை; உயிரோடு இருக்கிறார் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.

தாலிபான்கள் கொடி
இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி என்பவர், '' தாலிபான்கள் வானில் இருந்து தங்கள் கொடியை நிறுவ முயற்சிக்கிறார்கள். அந்த வேலையைதான் அதில் தொங்கி கொண்டிருக்கும் மனிதர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களின் முயற்சி இறுதியில் வெற்றிபெறவில்லை. ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் மனிதர் ஒரு கொடி கம்பத்திற்கு அருகில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்'' என்று கூறியுளளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications