சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்.. 79% செயல்திறன் மிக்கதாம்!
ஜெனீவா: சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.
Recommended Video
கொரோனா முதல் அலையில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான இன்னல்களை பெற்றது. தற்போது கொரோனா 2-வது அலையில் இந்தியா மீள முடியாத அளவுக்கு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஆட்டிப்படைக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனாவை கட்டுப்படுவதற்கான ஒரே வழி தடுபூசிகள்தான்.

சீனா தடுப்பூசி
அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஒரு நாடு எந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்றே பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலுக்கு மூல காரணமாக விளங்கிய சீனாவும் சைனோஃபாா்ம் என்ற தடுப்பூசியை தயாரித்தது.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
ஆனால் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கிடைக்க தாமதமானதால் பல்வேறு நாடுகள் இதனை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் சைனோஃபாா்ம் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 79 சதவீதம் செயல்திறன் மிக்கது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

22 நாடுகள் பயன்படுத்துகின்றன
மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஏற்கனவே 22 நாடுகள் சைனோஃபாா்ம் தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் சைனோஃபாா்ம் எந்த அளவுக்கு செயல் புரிகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications