அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் திட்டவட்டம்!
தெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது.
ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது.

மோதல்
அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டி வருகிறது. இதையடுத்து இருநாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பதற்றமான சூழல்
இந்நிலையில் ஈரான் எல்லையில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் நிறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்
மேலும் மத்திய கிழக்கு பகுதிகளான பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் ஏற்பட்டது.

வாய்ப்பில்லை
இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், முகமது ஜாவத் ஸாரிப் ஜப்பானில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா' என்ற கேள்விக்கு, ''அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை,'' என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் அதிகரிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துள்ளதால் இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. இருநாடுகளும் பேச மறுப்பதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
-
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ












Click it and Unblock the Notifications