மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!
பின்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நமது மரணத்தை தோராயமாக முன்கூட்டியே கணிக்கக் கூடிய ரத்த பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது
இந்த ரத்த பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விட முடியுமாம்.
இதைக் கேட்பதற்கு சற்று பீதியாக இருந்தாலும் கூட, இந்த பரிசோதனை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு உயிராபத்து இருக்கிறதா என்பதை ஓரளவு கணித்து விட முடியும் என்று இந்த ஆய்வுக் குழு அடித்துக் கூறுகிறது.

என்.எம்.ஆர் டெஸ்ட்...
நியூக்ளியார் மேக்னெட்டிக் ரிசொனன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ளனர். சுருக்கமாக என்.எம்.ஆர்.

பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....
இந்த சோதனையை பின்லாந்தின் ஊலு என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிகா அலா கொர்பெலா என்பவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

மார்க்கர்கள் மூலம்...
இதுகுறித்து இந்த ஆய்வாளர் கூறுகையில், " எங்களது இந்த என்.எம்.ஆர். சோதனையில் பல பயோ மார்க்கர்களைப் பயன்படுத்துகிறோம். அது உங்களது உடலின் உண்மை நிலையை சொல்லி வடும். அதை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.

ரத்த மாதிரி சோதனை....
கிட்டத்தட்ட 17,000 பின்லாந்து மற்றும் எஸ்டோனியர்களின் ரத்த மாதிரியை வைத்து இந்த பரிசோதனை ஆய்வை நடத்தியுள்ளனராம்.

மரணத்தைக் கணிக்கும் காரணிகள்...
இந்த ஆய்வில், நான்கு முக்கியமான பயோ மார்க்கர்கள்தான் நமது மரணத்தை கணித்துச் சொல்லுகிறதாம். அதாவது அல்புமின் மற்றும் ஆல்பா 1 அசிடிக் கிளைக்கோ புரோட்டீன் என்ற இரண்டு புரத அளவுகள், லிபிட் மெட்டபாலிசம் வேரியபிள்கள் மற்றும் சிட்ரிக் அமில அடர்த்தி ஆகியவைதான் இவை.

ஆய்வில் தகவல்....
இந்த நான்கு பயோ மார்க்கர்களும் அனைத்து மனிதர்களின் ரத்தத்திலும் கலந்துள்ளன. இவற்றின் அளவும், தன்மையும்தான் ஒருவருடைய மரணத்தை நிர்ணயிக்கிறதாம். இதைத்தான் இந்த ஆய்வும் கூறுகிறதாம்.

ஆரோக்கிய வாழ்வுக்கு...
வயது, புகை பிடித்தல் பழக்கம், மது அருந்தும் அளவு, கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவையும் கூட ஒரு மனிதனின் உயிர் ஸ்திரத்திற்கு முக்கியமானவைதான். இவற்றின் பாதிப்பாலும் மரணம் ஏற்படுகிறது.

முதல் ஆய்வு....
இதுகுறித்து பின்லாந்து பல்கலைக்கழக என்.எம்.ஆர். ஆய்வக தலைவர் பாசி சொய்னென் கூறுகையில், " உலகிலேயே இப்படிப்பட்ட ஆய்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றார்.

ரத்தப்பரிசோதனை...
இப்போது இந்த ஆய்வு தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ஒருவரது மரணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கணித்துக் கூறி விடும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாழ்நாளை நீடிக்கலாம்...
மேலும் அவ்வப்போது இந்த ரத்த பரிசோதனையை செய்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்நாட்களை நீ்ட்டிக்கவும் வழி பிறக்கும். PLoS Medicine என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications