தாஜ் மட்டும் அல்ல ஓபராய் ஹோட்டலையும் உளவு பார்த்தேன்: ஹெட்லி
நியூயார்க்: மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்த போட்ட திட்ட விபரங்களை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று தொடர்ந்து 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

உளவு
சித்தி விநாயகர் கோவிலை கண்காணிக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. உளவு பார்க்கையில் நான் பல்வேறு இடங்களையும் கண்காணித்தேன். சிஎஸ்டி, போலீஸ் தலைமை அலுவலகம், ஓபராய் ஹோட்டல், கடற்படை மற்றும் விமானப்படை தளங்களையும் உளவு பார்த்தேன். கொலாபா காவல் நிலையம், லியோபோல்ட் கபே, பல்வேறு கடைகள், ஹோட்டல்களை வீடியோ எடுத்தேன்.

ஜிபிஎஸ்
நான் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தினேன். ஜிபிஎஸ் கருவியில் பல்வேறு இடங்களின் விபரங்களை ஸ்டோர் செய்தேன். ஜிபிஎஸ் கருவியை எனக்கு சஜித் மிர் அளித்தார். அரபுக் கடலோரம் உள்ள சில இடங்களின் விபரங்களையும் சேகரித்தேன்.

மும்பை
2006ம் ஆண்டு நான் மும்பை சென்றபோது பிரீச் கேன்டி மருத்துவமனை அருகே உள்ள பி.ஜி.யில் தங்கினேன். சிஎஸ்டி(சத்ரபதி சிவாஜி ரயில் முனையம்) வழியாக தீவிரவாதிகள் தப்பிப்பது தான் திட்டம். அதை தாக்க முதலில் திட்டமிடவில்லை.

சோனி எரிக்சன்
உளவு பார்க்க போன், ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தினேன். சஜித் மிர் எனக்கு ஜிபிஎஸ் கருவியை அளித்தார். மேஜர் இக்பால் எனக்கு சோனி எரிக்சன் போனை அளித்தார். அந்த இரண்டையும் வைத்து நான் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தேன்.

ஐஎஸ்ஐ
லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு ஆதரவளித்து நிதியுதவி செய்வது ஐஎஸ்ஐ தான். அந்த அமைப்பை ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தாஜ் ஹோட்டல்
தாஜ் ஹோட்டலை தாக்குவது தான் முக்கியமானது. தாக்குதல் நடத்த திட்டமிட்டபோது தாஜ் ஹோட்டலின் மாதிரி வடிவம் செய்யப்பட்டது. அதை வைத்து ஹோட்டலில் எந்தெந்த இடங்களை தாக்குவது என்று திட்டமிடப்பட்டது. எந்த வழியாக ஹோட்டலுக்குள் நுழைவது, எந்த வழியாக வெளியேறுவது என்றும் திட்டமிடப்பட்டது.

ராணுவம்
ஜகியுர் ரஹ்மானின் கையாளான பிரிகேடியர் ரியாஸ் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர். ஐஎஸ்ஐயின் மேஜர் சமீர் அலியை நான் சந்தித்துள்ளேன். நான் ஐஎஸ்ஐக்காக வேலை செய்தபோது பலரை சந்தித்துள்ளேன்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications