அகதிகள் இலவசமாக தங்க ஹோட்டல் கதவை திறந்து விட்டுள்ள நார்வே கோடீஸ்வரர்
ஆஸ்லோ: சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு தனது ஹோட்டல்களில் 5 ஆயிரம் இரவுகள் இலசமாக தங்க அனுமதி அளித்துள்ளார் நார்வேயைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபரும், பெரும் பணக்காரருமான பீட்டர் ஸ்டார்டாலன்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். இந்நிலையில் நார்வேயைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் பீட்டர் ஸ்டார்டாலன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதை செயல்படுத்தியும் உள்ளார்.

நார்டிக் சாய்ஸ் ஹோட்டல்களை நடத்தி வரும் பீட்டர், ஐரோப்பாவுக்கு அகதிகளாக வருபவர்கள் தனது ஹோட்டல்களில் 5 ஆயிரம் இரவுகள் இலவசமாக தங்க அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
அகதிகளை எனது ஹோட்டல்களி்ல் இலவசமாக தங்க வைப்பதாக நான் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூர் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறினேன். இந்நிலையில் கடந்த வாரம் குடியேற்றத் துறை தலைவர் எனக்கு போன் செய்து சிரியாவில் இருந்து வந்துள்ள 50 அகதிகள் தங்க இடம் இல்லை என்றார். அவர்களை எனது ஹோட்டலில் தங்க வைத்தேன்.
அகதிகளாக வருபவர்களை தெருவில் தூங்கவிட முடியாது. நானும், எனது ஹோட்டல் ஊழியர்களும் போலீசாருடன் சேர்ந்து அகதிகளுக்கு தங்க இடம் அளித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications