அமெரிக்க மாலில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் பலி
கொலம்பியா, மேரிலான்ட்: அமெரிக்காவின் கொலம்பியாவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பால்டிமோர் என்ற நகரில் இந்த சம்பவம் நடந்தது. இதில் துப்பாக்கியால் சுட்ட நபரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடமானது, பால்டிமோர் மற்றும் வாஷிங்டனுக்கு வெகு அருகில் உள்ள புறநகர்ப் பகுதியாகும். இங்குள்ள ஒரு மாலில், அடையாளம் தெரியாத நபர் நுழைந்து சரமா்ரியாக சுட்டார். போலீஸார் உடனடியாக விரைந்து அந்த நபரை சுட்டதில் அவர் உயிரிழந்தார். மொத்தம் 3 பேர் இந்த சம்பவத்தில் இறந்தனர்.
இந்த சம்பவத்தால் வணிக வளாகமே பதட்டத்தில் மூழ்கியது. பொருட்களை வாங்க வந்தோர் பாதுகாப்பான இடங்களுக்குள் மறைந்து கொண்டனர். போலீஸார் வந்து நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாக அறிவித்த பிறகே பலரும் வெளியே வந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் விவரங்களைப் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.