சவுதியில் வேலை பார்த்த தமிழரை காணவில்லை
சவுதி: சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழரை காணவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனீபா பஷீர் முகமது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அல் உலைபி என்ற நிறுவனத்தில் பஞ்சர் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். அவர் ரம்ஜான் பண்டிகை முடிந்த கையோடு தனது குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
053200 8938 என்னும் அவரது செல்போன் எண்ணுக்கு முயன்றால் அது சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் குறித்து தகவல் தெரிய வந்தால் உடனே குவைத்தில் வாழும் அவரது மகன் அப்துல் ரஹீமை 00965 6644 6093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அனீபா வேலை பார்த்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் முகவரி,
அல் உதைபி (அல்லது உலைபி) கான்டிராக்ட் மெயின்டனென்ஸ் டிரான்ஸ்போர்ட் லிமிடெட்,
தபால் பெட்டி எண் 85448,
ரியாத்- 11691
தொலைபேசி எண்: 246 0000 / 246 6177