டொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்
டொரொன்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரி ஒருவரும் உயிரிழந்தார்.
படுகாயமடைந்தவர்களில் இளம்பெண் ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.
அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார்.
உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 60 வருடங்களில் முதன்முறையாக ஒப்புதல் பெற்ற மலேரியா மருந்து
- 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ
- தேர்தல் வரும் சமயம் மட்டுமே இந்தியாவில் நல்லது நடக்குமா?
- தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ













Click it and Unblock the Notifications